புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலிஹ் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகம் முஹம்மது ﷺ அவர்களின் வாழ்க்கையும் உன்னதமான போதனைகளும் கருணை, நீதி, இரக்கம், மரியாதை மற்றும் அமைதியான சகவாழ்வு போன்ற நிலையான விழுமியங்களை எமக்கு நினைவூட்டுகின்றன.
பல மதங்களும் பல மொழிகளும் கொண்ட எமது இலங்கை சமூகத்தில், எமது வேறுபாடுகளை மதித்து, எம்மை ஒரே மக்களாக ஒன்றிணைக்கும் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தி, நாம் தொடர்ந்து ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வோமாக.
இந்த புனிதமான நாள் ஒவ்வொரு இல்லத்திற்கும் அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலிஹ் தெரிவித்துள்ளார்.









