பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் காலி – அம்பலாங்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நேற்று (04) இரவு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
காலி வீதி – பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 700 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

July 5, 2025
0 Comment
21 Views