கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள், நேற்று (04) வெல்லம்பிட்டி, கட்டுவன, கடலோர மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுகளில் நடந்துள்ளன.
அதன்படி, தொட்டலங்க – அம்பத்தல வீதியிலுள்ள கித்தம்பஹுவ பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
அதேபோல் வலஸ்முல்ல – மித்தெனிய வீதியிலுள்ள திருவானாபொரல்ல பிரதேசத்தில் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் கட்டுவன, ஹிந்தகரல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் கொழும்பு துறைமுக வளாகத்தில் கொள்கலன் வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பிலியந்தலையைச் சேர்ந்த 49 வயதானவர் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து கொழும்பு – வெல்லவாய வீதியிலுள்ள மொரகெட்டியார பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவருடன் மோதியதில் சீனிமோதர, கொஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










