முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிக் போர் விமானக் கொள்வனவு தொடர்பான கொடுக்கல்வாங்கல் குறித்து வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மிக் போர் விமான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று (10) முற்பகல் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
அங்கு ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியிருந்தார்.







