பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த சிற்றுண்டிகளின் விலைகளை 5 ரூபாவால் உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், இடியாப்பம் ஒன்றின் விலையை 1 ரூபாவினாலும், அப்பம் ஒன்றின் விலையை 2 ரூபாவினாலும் உயர்த்தவும் அச்சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் இத்தீர்மானங்களை எடுத்துள்ளது.
இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை கூடவுள்ளது.
அன்று கூடி, பாண் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.









