நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) விசாரணை நடத்தியது.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா இராமநாதன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயரத்ன, இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு (Supreme Court) பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கை தொடர்பான உத்தரவு உரிய நேரத்தில் பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது.
அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை இந்த மனு கேள்விக்குட்படுத்தியுள்ளது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சட்டபூர்வ தகுதி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்குத் தொடரின் ஒரு பகுதியாக இந்த மனு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









