பண்டாரகம அடுலுகம ஜெயக்கொடி கந்த தாருல் நுவைஸா குர்ஆன் மதரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மத்ரஸாவின் அதிபர் இஸ்ஹாக் ஹாபிஸ் தலைமையில் நடைபெற்றது.
மத்ரஸா மாணவர்களுடைய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதோடு அவர்களிடையே நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக களுத்துறை ஜமீயத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷேஹ் அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி ஹஜ்ரத் கலந்து சிறப்பித்ததோடு
அல்ஹாஜ் தாரிக் மற்றும் ஏனைய அதிதிகளும் அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

