(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். சிராஜ் தனது பி.எச்.டி (PhD) கல்வியை மேற்கொள்ள சீனா பயணமாவதை முன்னிட்டு அவரை வாழ்த்தி கெளரவிக்கும் நிகழ்வு அட்டப்பளம் ரிலக்ஸ் கார்டனில் இடம்பெற்றது.
இதன்போது 14 வருடங்களாக சாய்ந்தமருது லீட் த வே (Lead The Way) முன்பள்ளியின் ஆலோசகராகச் செயற்பட்டு வந்த விரிவுரையாளர் எம்.எம். சிராஜ், லீட் த வே நிறுவனத்தின் பணிப்பாளர் ஐ.எம்..உவைஸ் அவர்களினால் பொன்னாடை போர்த்தியும் நிறுவனத்தின் அதிபர் எம்.எப்.பர்ஸானாவினால் நினைவுச் சின்னமும் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









