கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த மூன்று விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இன்று (19) காலை நிலவிய பனிமூட்டத்தின் காரணமாகவே இந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-881 விமானம், சவூதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 விமானம் ஆகியன மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
அதேபோல் சவூதி அரேபியாவின் தம்மாமிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-254 விமானம் இந்தியாவின் கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
தற்போது இந்த பனிமூட்டமான நிலைமை சீராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










