அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தான் பதவி ஏற்றபின் ரஷ்யாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு ஜனாதிபதி புட்டினுடன் தொலைபேசியிலும் பேசி நட்பை வளர்த்தார்.
உக்ரைனுடன் ரஷ்யா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் ட்ரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த டட் ரம்ப் ரஷ்யாவின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
ரஷ்யாவுக்கு எதிராக ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.
இந்நிலையில், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து ஜனாதிபதி ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்துள்ளார். இத்தடை உத்தரவுகளை மேலும் விரிவுபடுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.










