கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய மாகாண பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான கள ஆய்வு விஜயம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (10) பலத்த மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் சம்பந்தமாகவும், திண்மகழிவு முகாமைத்துவம், மாணவர்களுக்கான சுத்தமான குடிநீர் மற்றும் டெங்கு நோயிலிருந்து மாணவர்களை காப்பாற்றுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் என்பனவற்றை ஆராயும் கள விஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற களஆய்வு விஜயத்தின் போது மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் முறைசாரா கல்வித் திட்ட பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.ஜெகநாதன், பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு கல்வி வலைய அலுவலக உயர் அதிகாரிகள், பாடசாலை சமூகத்தினர் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சுகாதார வசதிகள் சம்பந்தமாக இங்கு முதன்மையான, கள ஆய்வு பணிகள் சுகாதார தரப்பினரால் முன்னெடுக்கப்படிருந்தன