கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தீயை அணைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.









