“Ugap Cricket Fiesta 2025” –
புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் (Ugap) ஏற்பாட்டில் கிரிக்கெட் தொடர் போட்டி 15 ஏப்ரல் 2025 அன்று R4 Futsal மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல அணிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், வீரர்களின் ஆற்றல், ஒற்றுமை மற்றும் போட்டித் தகுதி பாராட்டத்தக்கவையாக இருந்தது.
அந்தந்த ஆட்டங்களின் நேர்மையான நடத்தை மற்றும் துல்லியமான முடிவுகளுக்காக Mr.Amath மற்றும் Mr. Faisan ஆகியோர் அம்பயர்களாக பணியாற்றினர்.
இந்நிகழ்வின் அதிதிகளாக Asian football federation ‘B’ license coach , Open University of Srilanka (Puttalam study centre) Assistant Director Mr.Jiffry அவர்கள்
மற்றும் School sports trainer,P/Wettala M.M.V 2024 ம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் காற்பந்தாட்ட போட்டில் முதலிடம் பெற பக்கபலமாக
இருந்தவர்களுள் முக்கியமானவர் Mr.N.Amlak அவர்களும்,
தற்போதைய Sepak Takraw இலங்கை அணியின் தற்போதைய தலைவர் மற்றும் கற்பிட்டி , வனாதிவில்லு பிரதேச சபைகளுக்கான விளையாட்டு அதிகாரி (sports officer) Mr. T.H.A Zakee Ahmed அவர்களும்
பங்கேற்று விழாவை சிறப்பித்ததோடு, அனைத்து அணிகளுக்கும் ஊக்கத்தையும் பாராட்டையும் வழங்கினார்.
போட்டியின் இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற, யங் ஹிட்டர்ஸ் அணி இரண்டாம் இடம் பெற்றது.
சிறந்த பந்துவீச்சாளர் விருதை நிஷ்கான் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை முஸர்ரப் ஆகியோர் வென்றனர்.
இந்த விழா, விளையாட்டு பரிமாற்றம் மட்டுமின்றி ஒற்றுமையையும் உறவுகளைப் பெரிதும் வலுப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.