வெள்ளித்திரை – சின்னத்திரை – டிஜிட்டல் திரை என பொழுதுபோக்கு வடிவங்களின் அனைத்து அம்சங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை தேவயானி கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘ நிழற்குடை ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சிவ ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிழற்குடை ‘எனும் திரைப்படத்தில் தேவயானி, விஜித் , வடிவுக்கரசி, இளவரசு , ராஜ்கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர் பி குரு தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தர்ஷன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோதி சிவா தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படம் – எதிர்வரும் மே மாதம் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகை தேவயானி அழுத்தமான வேடத்தில் நடித்திருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.