செலவுகளை குறைப்பதற்காக பொதுத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே சந்தர்ப்பத்தில் நடத்த வேண்டுமாயின் சட்டரீதியான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தங்களது தரப்பினர் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.









