குயின் விக்டோரியா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் 30.03.2024 அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த கப்பலில் 1,812 சுற்றுலா பயணிகளும் 964 பணிக்குழாமினரும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே குறித்த கப்பலில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் 30.03.2024 காலி, கண்டி மற்றும் பின்னவல ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










