அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தமான NPT-யிலிருந்து விலகுவதும், நாட்டின் அணு கொள்கையை மறுபரிசீலனை செய்வதும் முழுமையாக சாத்தியமான நடவடிக்கைகள் என ஈரான் நாடாளுமன்றத் தலைமைக் குழுவின் பேச்சாளர் அப்பாஸ் குடார்ஸி தெரிவித்துள்ளார்.
NPT-யிலிருந்து விலகுவதுடன், ஈரானின் அணு கொள்கையை மறுபரிசீலனை செய்வது “அமெரிக்காவையும் அதன் ஆதரவாளர்களையும் அவர்களது இடத்தில் நிறுத்தும்” என அவர் கூறியதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.








