கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளில் நாளை (03) இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரை 24 மணிநேரத்திற்கு நீர்விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நுகேகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, மொரட்டுவை, இராவத்தவத்தை, சோய்சாபுர, அங்குலானை, இந்திபெத்த, கட்டுபெத்த, கல்தெமுல்ல, மோதர, கொரளவெல்ல, எகொடஉயன மற்றும் கட்டுகுருந்த ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் பாதிக்கப்படும்.
மேலும், செத்சிறிபாய, ஹிம்புட்டானை, உடுமுல்ல வீதி, மாலிககொடெல்ல, பேங்க் சந்திப்பு வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹேவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்விநியோகத் தடையால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தடை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.









