இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
அச்சங்கத்தின் செயற்குழு 19.08.2026 பிற்பகல் கூடி இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அதன் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவர், நிர்வாக விதிமுறைகளுக்குப் புறம்பாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியே அச்சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பைத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இது குறித்து மேலும் கலந்துரையாடி, நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பாக இன்று நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என உபுல் ரோஹண மேலும் தெரிவித்தார்.









