2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகளை doenets.lk இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.
பரீட்சையானது 3,547 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்தப்பட்டதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளின் மறுசீராய்விற்கான விண்ணப்பங்களை ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 07 ஆம் திகதி வரை ஒன்லைன் முறைமையூடாக சமர்ப்பிக்க முடியும்.









