பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து பணம் அறவிடுவதால் நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை பெறுவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருட்கொள்வனவின் போது விநியோகிக்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் பணத்தால், நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டுகின்றன.
முன்னதாக பொருட்கொள்வனவின் போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்கிய நிறுவனங்கள், தற்போது அதற்காக நுகர்வோரிடமிருந்து பணத்தை அறவிடுகின்றன.
இதன்மூலம், ஒரு நாளைக்கு சுமார் 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை நிறுவனங்கள் இலாபமாக ஈட்டுகின்றன.
பொலித்தீன் பைகளுக்கு அறவிடப்படும் பணம் அரசாங்க வரியாக சேகரிக்கப்பட்டு, கழிவு முகாமைத்துவம் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனினும், கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் இந்த வரியை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.
இந்தநிலையில், நிறுவனங்கள் ஈட்டும் இந்த மேலதிக இலாபத்தை அரசாங்கம் முறையாக வரி மூலம் வசூலித்து, அதனை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.










