இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட 12 மில்லியன் மக்கள் TIN எனப்படும் வரி இலக்கங்களை பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைய 12 மில்லியன் மக்கள் வரி இலக்கங்களை பதிவு பெற்றுள்ளதாக, திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் எண்ணிக்கை சுமார் 17 மில்லியனாக உள்ளதாக புள்ளிவிரபங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், 5 மில்லியன் மக்கள் தங்கள் TIN எண்களைப் பெறவில்லை என்றும், இந்த குழு தானாக முன்வந்து பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் நந்தன குமார கூறியுள்ளார்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை அடைய உள்நாட்டு இறைவரி திணைக்களம் பாடுபடும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.










