நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாகத் தமது சேவை நிலையங்களுக்கு வர முடியாத சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாகத் தமக்கு அருகிலுள்ள சிறைச்சாலைகளில் சேவைக்குச் சமூகமளிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தற்போது தடைகள் ஏற்பட்டுள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.










