ஜித்தா: இலங்கை 2026 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 09, 2025 சவுதி அரேபியாவின் ஜித்தாவில் கையெழுத்திடப்பட்டது.
சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் முனீர் முலாஃபர் மற்றும் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா துணை அமைச்சர் டாக்டர் அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள்
ஹஜ் 2026 இல் பங்கேற்கும் இலங்கை யாத்ரீகர்களுக்கு வசதி செய்து சேவை செய்வதற்கு இரு அரசாங்கங்களின் பரஸ்பர புரிதல் மற்றும் அர்ப்பணிப்பை இந்த ஒப்பந்தம் சுட்டிக் காட்டுகிறது.
இவ் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஹஜ் கோட்டா 3,500 ஆகும்.
கையொப்பமிடும் நிகழ்வின் போது, துணை அமைச்சர் முனீர் முலாஃபர், 2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்காக சவுதி அதிகாரிகள் மேற்கொண்ட சிறந்த ஏற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார், மேலும் இலங்கை யாத்ரீகர்களுக்கு 2026 ஆம் ஆண்டு வெற்றிகரமான ஹஜ் பயணத்தை உறுதி செய்வதற்காக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் இலங்கை தனது நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடரத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார். ஹஜ் சட்டம் வரையரை உட்பட, நாட்டில் ஹஜ் நடவடிக்கைகளை முறைப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறிப்பிடவும் அவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லார், குழுவின் ஒழுங்குமுறை பங்கு மற்றும் வரவிருக்கும் ஹஜ் காலத்தை செயல்படுத்தப்படும் செயல்பாட்டு செயல்முறைகள் குறித்து விரிவாகக் கூறினார்.










