காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் மூன்று கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.










