அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு 15.10.2025 வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி 1,415,016 பயனாளி குடும்பங்களுக்கு 11,223,838,750.00 ரூபாய் தொகை விநியோகிக்கப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.