இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (12) மாலை 04.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியில் இருந்து வந்த பேருந்திற்கு இடம் வழங்க முற்பட்ட போதே குறித்த முச்சக்கர வண்டி கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்