யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
69 வயதான மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தெள்ளிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக நேற்று (10) வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.
இதனால் உடல் நலம் மோசமான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்ட நிலையில், சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.