பாராளுமன்ற நூலகத்தின் பயன்பாட்டுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் அண்மையில் பாராளுமன்ற நூலகத்திற்கு கையளிக்கப்பட்டன
இதற்கமைய ‘வீதிப் பாதுகாப்புச் செயற்றிட்டம் 2025-2026’என்ற புத்தகம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவினால் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேரவிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற 6 பாரிய வீதி விபத்துக்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற நூலகத்திற்கு வழங்கப்பட்டன.