கடந்த செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 10,221 மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஒரு மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான மோட்டார் வாகனப் பதிவுகள் நடந்த சந்தர்ப்பம் இது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவிக்கையில்,
இதேபோல், செப்டெம்பரில் மட்டும் 32,845 மோட்டார்சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் 30 வரை, 37,115 மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 160,590 மோட்டார்சைக்கிள்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.










