முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான பராமரிப்புக்காக 490 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நிதி செலவிடப்பட்டுள்ளது.
2017 முதல் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரையாக காலப்பகுதியில் இந்த பணம் செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோரின் ஓய்வூதியங்கள், வாகனங்கள் மற்றும் பிற தொடர்ச்சியான செலவுகள் இவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகை
அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஹேமா பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 2017 முதல், மைத்திரிபால சிறிசேன 2019 முதல், கோட்டாபய ராஜபக்ச 2022ஆம் ஆண்டு முதல் மற்றும் ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டு முதல் இந்த சலுகைகளைப் பெற்றுள்ளனர்.