பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் 2019ஆம் ஆண்டு திருமண வைபவத்திற்காக இலங்கை மின்சார சபையின் 2 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக
தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் நேற்று (11) அனுமதி அளித்தது. நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர்கள் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் இதற்கான உத்தரவை பிறப்பித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவின் கோரிக்கைக்கு அமைவாக, அப்போதைய மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், இந்த வைபவம் நடைபெற்ற ஒரு தனியார் இல்லத்திற்குச் செல்லும் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள வீதியை ஒளிரச் செய்ய மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிக்கப்பட்டது.
இந்த பணம் பின்னர் நிகழ்வுடன் எந்த தொடர்பும் இல்லாத மூன்றாம் தரப்பினரான மூலம் தரப்பான நிறுவனம் மூலம் செலுத்தப்பட்டதால், இது அரச அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலை உள்ளடக்கியது என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மின்சார சபை சார்பாக, பெறப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த விடயம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு மின் கட்டணத்திற்கான பற்றச்சீட்டு வழங்கப்படவில்லை என்றும், அவர் சார்பாக மூன்றாம் தரப்பினர் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விடயங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, அரசியலமைப்பின் பிரிவு 12(1) இன் கீழ் மனுவைத் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்து, விசாரணையை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.