கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிச் செல்லும் ரயில் புவக்பிட்டிக்கும் அவிசாவளைக்கும் இடையில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக களனியிலிருந்து கொஸ்கம வரை ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரயில் தடம்புரண்ட சந்தர்ப்பத்தில் இளநீர் ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்று, அந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.