இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி 03.09.2025 புதன்கிழமை இலங்கை வருகிறார்.
இன்று (03) முதல் 05 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்.
இவ் விஜயத்தின்போது அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனும் மரியா திரிபோடி கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்