மின்சார சபை மறுசீரமைப்பு மூலம் உருவாக்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு மாற விரும்பாத, தானாக முன்வந்து ஓய்வு பெற விரும்பும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 மில்லியன் வரை இழப்பீடு வழங்க நிர்வாக ஆணையம் முடிவு செய்துள்ளதாக மின்சார சபை மூத்த பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.
நிறுவப்பட்ட துணை நிறுவனங்களுக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த பொறியாளர் கூறினார்.
இருப்பினும், துனை நிறுவனங்களில் சேர விரும்பும் அல்லது விரும்பாத ஊழியர்கள் அதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மறுசீரமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து நிறுவனங்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த பொறியாளர் மேலும் தெரிவித்தார்










