முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்புகளோ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு நபர்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும், அவை குறிப்பிடத்தக்க விடயங்கள் அல்ல என்று அமைச்சர் கூறினார்.
இந்த நாட்டில் சட்டம் சீராக செயல்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் தற்போது கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று கடந்த காலங்களில் கூறப்பட்டாலும், இன்று அத்தகைய நிலைமை காணப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.