இஸ்மதுல் றஹுமான்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களின் ஒன்று கூடலும் பாடசாலை மாணவர்களுக்காக ஊடக செயலமர்வும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு, போரத்தொட்ட அல் பலாஹ் கல்லூரியில் சமகாலத்தில் இடம்பெற்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், பலகத்துறை கலை இலக்கிய வட்டம் ஆகியன இணைந்து நடாத்திய இந்த நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் என். எம். அமீன் மற்றும் பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம். ஜே. எம். தாஜூதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் இருவேறு அமர்வுகளாக நடைபெற்றன. அன்று மாலை இடம் பெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முலப்பர் பிரதம அதிதியாகவும், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சட்டதரணி எம். எம். பஸீர், முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் அல் பலாஹ் கல்லூரி அதிபர் யூ. எம். பாயிஸ் , மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை மாணவ, மாணவிகள் மத்தியில் ஊடகம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நவீன உபகரணங்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், பாடசாலைகளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை பிரதான ஊடகங்களுக்கு தெரியப்படுத்தல் அல்லது அறிக்கையிடல், செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு எனும் தலைப்பகளில் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பயிற்ச்சி திட்டங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜாவிட் முனவ்வர் மற்றும் ஊடக பயிற்றுவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளருமான இஸ்பஹான் ஷர்ப்டீன் ஆகியோர்கள் விரிவுரைகளை நடாத்தினர். ஒன்று கூடடல் மற்றும் மாணவர்களுக்கான செயலமர்வுகளை ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை போரத்தின் உப தலைவர்களில் ஒருவரான கலாபூஷணம் எம். ஏ எம். நிலாம் மற்றும் போரத்தின் தேசிய அமைப்பாளர் இர்ஷாட் ஏ காதர், செயலாளர் சாதிக் ஷிஹான் ஆகியோர் மேற்கொண்டனர்.