மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியிலுள்ள வீடொன்றின் முன் நேற்று (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.
9 மில்லிமீட்டர் ரக தோட்டா கொண்ட பிஸ்டல் வகை துப்பாக்கியை இதற்கு பயன்படுத்தியுள்ளதாகவும் தோட்டாவும் தோட்டா உறையும் குறித்த வீட்டுக்கு முன்னால் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.