மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை பஸ் விபதொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவின்ன பஸ் தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழையும்போது மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பிரதான வீதியில் பயணித்த மற்றொரு பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது விபத்துக்குள்ளான பஸ் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.