அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களின் முன்னேற்றம், தற்போதைய நிலைமை மற்றும் இந்தத் தீர்வை வரிக் கொள்கை செயல்படுத்துவதுடன் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் தொடர்பில் ஏற்றுமதிக் கைத்தொழில் தொடர்பான அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 12.07.2025 சனிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபடுள்ளார்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் இந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வர்த்தக சமூகம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் சாதகமான திருத்தங்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் இந்த சவாலான நேரத்தில் நேர்மறையான அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி புதிய சந்தை அணுகுமுறைகளை அடையாளம் காண அரசாங்கம் மற்றும் தனியார் துறையும் இணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டியதுடன், அதற்காக ஒன்றிணைந்து செயல்படுமாறு அனைத்துக் தரப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.