பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் 08.07.2025 செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இருவர் பிரவேசித்து கைத்துப்பாக்கி ஒன்றால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.