மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (07) முதல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர் பட்டியல் தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் பிற மாவட்டங்களுடன் தொடர்புடைய விலைப்புள்ளிகளைப் பெறுதல் உள்ளிட்ட அனைத்து இலத்திரனியல் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

July 7, 2025
0 Comment
4 Views