அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் அதிகாலையில் சிறுவர்களிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 சிறுவர்கள் பலியாகியுள்ளதோடு 5 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.