பிலிப்பைன்ஸின் மின்டானோவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று (28) காலை 7.07 மணிக்கு டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் நிலநடுக்கத்தைப் பற்றி அறிவித்தது, மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.