சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த விசேட யோகா நிகழ்வு 21.06.2025 சனிக்கிழமை கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அமைச்சர்களான கிரிஷாந்த அபேசேன, அனில் ஜயந்த பெர்ணான்டோ பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி பிரதியமைச்சர்களான கே.பி.அருண ஜயசேகர, கமகெதர திசாநாயக்க, சுகத் திலகரத்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.