குற்றச் செயல் வரும்படிகள் சட்டமூலத்தில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்.
குற்றச் செயல் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் கடந்த ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்றதுடன், இரண்டாவது மதிப்பீட்டைத் தொடர்ந்து குழு நிலை விவாதத்தில் ஆராயப்பட்டது.
இதன் பின்னர் மூன்றாவது மதிப்பீட்டின் போது குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்களின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காகக் கடந்த 03 ஆம் மாதம் 01ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க குற்றச் செயல் வரும்படிகள் சட்டமாக அமுலுக்கு வருகின்றது.