ஜூலை 2 முதல் அமுலுக்கு வரும் வகையில் 16 சிரேஸ்ட சிறை அதிகாரிகளின் இடமாற்றங்களை சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறப்பு தர கண்காணிப்பாளரான ஏ.சி. கஜநாயக்க, போகம்பறை சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறப்பு தர கண்காணிப்பாளரான டி.ஆர்.எஸ். சில்வா, மஹர சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பதில் கண்காணிப்பாளரான சுதன் ரோஹண, இப்போது மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

June 26, 2025
0 Comment
363 Views








