மலேசியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு, Zeenath Trading (Pvt) Limited மற்றும் Grand Zenith Banquet & Event நிறுவனங்களின் தலைவரான அல் ஹாஜ் ஏ. எச். எம். மஹீர், மலேசிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனது நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் சார்பிலும் மலேசிய மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய தேசிய தினத்தை முன்னிட்டு, மலேசிய மன்னர், அரசாங்கம் மற்றும் மக்களுக்கு தனது அன்பான வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்த அவர், மலேசியா தொடர்ந்து அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியுடன் முன்னேற வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
மேலும், மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவும் நெருங்கிய ஒத்துழைப்பும் எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் வலுப்பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்த அவர், மலேசிய மக்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
மலேசிய மக்கள் தொடர்ச்சியான அமைதி, செழிப்பு மற்றும் வெற்றியைப் பெற வேண்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.
“SELAMAT HARI KEBANGSAAN MALAYSIA!”
அல் ஹாஜ் ஏ. எச். எம். மஹீர்
சமாதான நீதவான் (Justice of the Peace)
தலைவர்,
Zeenath Trading (Pvt) Limited
Grand Zenith Banquet & Event
கொழும்பு, இலங்கை








