பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய செப்டெம்பர் 2 ஆம் திகதி திம்பு நகரின் தாஷிச்சோட்சோங்கில் பூட்டானின் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck) அரசரைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது பூட்டானின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்தக்கூடிய துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
பூட்டானின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், இலங்கை கொண்டுள்ள அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்வதிலுள்ள விருப்பத்தைப் பூட்டான் அரசர் இங்கு வெளிப்படுத்தினார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பூட்டானுக்குள் முதலீட்டு வலயமொன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
அத்தோடு, பூட்டான் தற்போது எதிர்கொள்ளும் சனத்தொகை சவால்கள், குறிப்பாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளமை மற்றும் அது நாட்டின் எதிர்கால தொழிலாளர் படைக்கும் சனத்தொகைக்கும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளினதும் நிலையான அபிவிருத்திக்காக இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதும், இரு நாடுகளினதும் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் (best practices) பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவமும் இச்சந்திப்பில் மேலும் வலியுறுத்தப்பட்டது.









