2024/2025 ஆம் ஆண்டுகளுக்கான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைவரும் தமது வருமான வரி விபரத்திரட்டுக்களை இம் மாதம் 30 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனத் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் வருமான வரி விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக, 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களை 1944 அல்லது www.ird.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரிப் பிராந்திய அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.










